அதிமுக கவுன்சிலர் திமுகவில் |
03-03-2022 சிவகாசி மாநகராட்சியில் வெற்றிபெற்ற 11 பேரில் 9 அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தனர் சிவகாசி மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவில் நேற்று இணைந்தனர். விருதுநகர் மாவட்டத்தின் முதல் மாநகராட்சியான சிவகாசியில், தேர்தல் முடிந்து இன்று கவுன்சிலர்கள் அனைவரும் பொறுப்பேற்க உள்ளனர். மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 24, அதிமுக 11, காங்கிரஸ் 6 , பாஜக, விசிக, மதிமுக தலா ஒரு வார்டுகளிலும் 4 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றிபெற்றன. இந்நிலையில், அதிமுக 1-வது வார்டு கவுன்சிலர் செல்வம், 2-வது வார்டு சசிக்குமார், 4-வது வார்டு அழகுமயில், 6-வது வார்டு நியா, 7-வது வார்டு சேதுராமன், 13-வது வார்டு மாரீஸ்வரி, 14-வது வார்டு சாந்தி, 17-வது வார்டு நிலானி, 21-வது வார்டு சந்தனமாரி ஆகியோர் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தற்போது 2 கவுன்சிலர்கள் மட்டுமே அதிமுகவில் உள்ளனர். மேலும், திருத்தங்கல் முன்னாள் அதிமுக நகரச் செயலர் பொன்.சக்திவேல், முன்னாள் ஒன்றியச் செயலர் பலராமன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிசெல்வம், ரமணா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். - The Hindu Tamil |