சிவகாசி மாநகராட்சியின் முதல் கூட்டம் |
31-03-2022 சிவகாசி மாநகராட்சியின் முதல் கூட்டம் சிவகாசி மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சிக்குரிய கணக்கு உள்பட 11 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இதில் வேலாயுதம் சாலையில் ரூ.5 கோடி செலவில் வணிக வளாகம் கட்டிடம் கட்டும் திட்டத்துக்கு கவுன்சிலர்கள் ஞானசேகரன், மகேஸ்வரி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் திருத்தங்கல் பகுதியில் உள்ள வார்டு 13-க்கு உட்பட்ட பகுதியில் தார்ச்சாலை அமைக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கிய மாநகராட்சிக்கு கவுன்சிலர் மாணிக்கம் நன்றி தெரிவித்தார். கவுன்சிலர்களுக்கு வழங்கிய தீர்மான நகல் ஆங்கிலத்தில் இருப்பதை சுட்டிக் காட்டி இனி வரும் காலங்களில் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் தீர்மான நகல்கள் தமிழில் இருக்க கவுன்சிலர் சேது ராமன் வலியுறுத்தினார். குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகளை முடிந்தளவுக்கு விரைவில் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பேன் என மேயர் சங்கீதா இன்பம் உறுதியளித்தார். |