சிலம்ப போட்டியில் சாதித்த சிவகாசி மாணவி |
27-08-2022 சிலம்ப போட்டியில் சாதித்த சிவகாசி மாணவி இந்திய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் பன்னாட்டு அளவிலான சிலம்பம் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியில் படிக்கும் வணிகவியல்துறை மாணவி அவ்வைமாரியம்மாள் கலந்து கொண்டு தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். சாதனை மாணவி அவ்வை மாரியம்மாளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் பழனீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி, பேராசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர். |