SIVAKASI WEATHER
AAA உத்சவ் 2024

05-09-2024
AAA உத்சவ் 2024

திருத்தங்கல் AAA இன்டர்நேஷனல் பள்ளியில் விருதுநகர் மாவட்டப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கலைப் போட்டி "AAA உத்சவ் 2024" 31.08.2024 அன்று பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை செயலாளர் முனைவர் விக்னேஷ் குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திருமதி பொங்கல் புனிதா துவக்கவுரை வழங்கினார். 30 பள்ளிகளிலிருந்து சுமார் 850 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி வேண்டாத பொருட்கள் கொண்டு கலை படைப்புகள் செய்தல் மற்றும் நடனம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் மாணவ மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர் பெருமக்களுள் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நினைவு பரிசாக பஞ்சுராஜன் அமராவதி துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது. அதிக போட்டியில் கலந்துகொண்டு அனைத்திலும் அதிக மதிப்பெண்களை பெற்று முதன்மையாக சிறந்து விளங்கிய கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழா மாலை 4 மணிக்கு தொடங்கியது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தாளாளர் முனைவர் கணேசன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார்


News & Events
top