SIVAKASI WEATHER
1008 திருவிளக்கு ஊர்வலம்

21-12-2025
1008 திருவிளக்கு ஊர்வலம்

மார்கழி 1ம் தேதி சிவகாசியில் 1008 திருவிளக்கு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து மாரியம்மன் அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். உலக அமைதிக்கும், நாடு செழிக்கவும், சிவகாசி தொழில் சிறக்கவும் வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவவிழாவில் எண்ணற்ற பொது மக்களும் பங்கேற்றனர். டாக்டர் கதிரவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தீப திருவிழா ஏற்பாடுகளை திருமதி விஜயமோகினி அண்ணாமலைச்சாமி அவர்கள் செய்திருந்தார்.


News & Events
top