Sivakasi Population Reading |
11-02-2011 சிவகாசியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம் சிவகாசியில் புதன்கிழமை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை, இக்கணக்கெடுப்புப் பணி நடைபெறும். சிவகாசி வருவாய்க் கோட்டாட்சியர் சி.முனுசாமி வீட்டில் இந்தப் பணி தொடங்கியது. அவரிடம் உரிய கேள்விகள் கேட்டப்பட்டன. நிகழ்ச்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் ராமசாமி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டலத் துணை வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |