SIVAKASI WEATHER
RTO enquiring - doubtful death of a young woman

11-02-2011
பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

சிவகாசியில் புதன்கிழமை பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சசிநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.

இவரது மனைவி ஜெயந்தி (24). இவர்கள் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்தின்போது, வரதட்சிணையாக 45 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 1 லட்சம் தரப்பட்டதாம். இந்நிலையில் கணவர் செந்தில்குமாரும், அவரது தாயார் வேலுத்தாயும், மருமகளை ராசியில்லாதவள் என இழிவுபடுத்திக் கொண்டே இருந்தனராம்.

இதனால் மனமுடைந்த ஜெயந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை ஜெகதீசன் கொடுத்த புகாரின்பேரில், சிவகாசி நகர் போலீஸรดர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News & Events
top