Theft |
11-02-2011 வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை திருட்டு சிவகாசி, பிப். 10: சிவகாசி பெரியகுளம் காண்மாய் சாலைப் பகுதியில் மாணிக்க விநாயகர் காலனியில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரி ரவீந்திரனின் வீடு உள்ளது. இவர் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் கடைக்குச் சென்று விட்டார். இவரது மனைவி லீலாவதியும் காலை 10.30 மணியளவில் கடை வீதிக்குச் சென்று விட்டாராம். இருவரும் பிற்பகல் மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தபோது, வீட்டில் பல பகுதிகளில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததாம். வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 30 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் கே.எஸ். முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சிவகாசி நகர் போலீஸรดர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். |